Friday, June 13, 2008

கசல் கவிதைகள்


ரோஜா செடிக்கு
இறைவன் கொடுத்த பரிசை
திருடி;
உனக்கு கொடுத்தால்
எப்படி அது
பரிசாகும்?

ரோஜாவை
ஓவியம் வரைபவர்களே..!
அதன் வாசனையை
எப்படி வரைவீர்கள்?

கசல் கவிஞன் வைரபாரதி

Tuesday, March 4, 2008

வைரபாரதி ghazal


பூவில்;
இறைவன் தூவிய விதைகள்
பெண்களின் கண்களாய்
வந்து விட்டன ...



அருவியில் நிலா
தனது வெளிச்சத்தை குளிக்க விட்டு விட்டு ...
தான் நனையாமல் மிதக்கிறது.. ;



காதல் உன்னை
தனியே விட்டு விடும் போது
த்யானம் உன்னை காதலிக்கிறது....


--- காதல் கவி வைரபாரதி